நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ரஜவாசல விற்பனை நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த விற்பனை நிலையம் இன்று (11) திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த ரஜவாசல விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் ஆகியன குறித்த ரஜவாசல விற்பனை நிலையத்தின் மூலம் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.