நியாயமான விலையில் பொருட்களை வழங்க புதிய விற்பனை நிலையம் திறந்து வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நியாயமான விலையில் பொருட்களை வழங்க புதிய விற்பனை நிலையம் திறந்து வைப்பு!


நியாயமான விலையில் பொருட்களை விற்பனை செய்வதற்கான ரஜவாசல விற்பனை நிலையம் இன்று திறந்துவைக்கப்படவுள்ளது.


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த விற்பனை நிலையம் இன்று (11) திறந்து வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாரஹேன்பிட்டி விசேட பொருளாதார மத்திய நிலையத்தில் குறித்த ரஜவாசல விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.


பல்வேறு அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் உற்பத்திகள் மற்றும் உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகள் ஆகியன குறித்த ரஜவாசல விற்பனை நிலையத்தின் மூலம் நியாயமான விலையில் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளன.









Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.