நாட்டில் நிலவும் பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார பிரச்சினைகள் காரணமாக பொது மக்களினால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு தமது ஆதரவினை வழங்கவுள்ளாதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த தேர்தல் காலங்களில் தற்போதைய நிர்வாகத்தின் மீது பொது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டிய்யுள்ளார்.
மேலும், அரசாங்கத்தின் தவறான நடவடிக்கைகள் காரணமாகவே விவசாயிகள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினர் வேலை நிறுத்தப் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் ரோஹன லக்ஷ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அரசாங்கம் தமது கடமைகளை நிறைவேற்றத் தவறியதனால், போராட்டங்களுக்கு தலைமைத்தாங்குவதற்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்குவதாக தெரிவித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் ரோஹன லக்ஷ்மன் பியதாச மேலும் தெரிவித்துள்ளார்.