இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, சட்டமா அதிபருக்கு, குறித்த ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையின் பரிந்துரைகள் என குறிப்பிடப்படும் பக்கங்களின் பிரதிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
குறித்த அறிக்கையின் பிரதிகளின்படி, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.