கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட அரசியல்வாதிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை! அமைச்சர் நாமல் ராஜபக்ஷ காட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட அரசியல்வாதிகளுக்கு எந்தவித உரிமையும் இல்லை! அமைச்சர் நாமல் ராஜபக்ஷ காட்டம்!

namal rajapaksa sri lanka cricket

கிரிக்கெட் நிர்வாகத்தில் தலையிட அரசியல்வாதிகளுக்கு எந்தவித உரிமையும் கிடையாது என விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் நிர்வாகம் என்பது சுயாதீனமான ஒரு நிர்வாக அமைப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், விளையாட்டுத்துறைக்குள் அரசியலை கொண்டுவருவது சிறந்ததொரு செயற்பாடாக அமையாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், விளையாட்டுச் சட்டங்களை புதுப்பிப்பதற்காக நிபுணர் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளதாக, விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவின் மூலம் புதிய விளையாட்டுத்துறை சட்ட மூலமொன்று உருவாக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்த அரவிந்த டி சில்வா தலைமையில் மற்றுமொரு குழு உருவாக்கப்பட்டு உள்ளதாகவும், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.