களுத்துறை மாவட்டத்தின் மத்துகம பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட போந்துபிட்டிய 771 ஆவது கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குறித்த பிரதேசம் உடன் அமுலுக்கு வரும் வகையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.