நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க ஜனவரி 12 ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக பொதுவெளிக்கு வந்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு நேற்று (19) மருத்துவ பரிசோதனைக்காக சிறை அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை அழைத்துச் சென்றனர்.
சிறைச்சாலைக்கு சமர்ப்பிக்கப்பட்ட மருத்துவ பதிவுகளின்படி, ரஞ்சன் ராமநாயக்கவை முழங்கால் பரிசோதனை செய்வதற்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.