முஸ்லிம்களின் விவாக சட்டத்தின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் தெரிவிக்கின்றார்.
முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கான பிரேரனை நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்டது.
இதன்படி, குறித்த பிரேரனையை முன்வைத்து உரையாற்றிய போதே நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்
இலங்கையில் வாழுகின்ற நூற்றுக்கு 10 வீதமான முஸ்லிம்களுக்கான விவாக சட்டம் உள்ளிட்ட அது சார்ந்த அனைத்து விடயங்களும், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படுகின்றது.
காதி நீதிமன்றக் கட்டமைப்பில், வழக்கறிஞர்களை நியமிப்பது மற்றும் அவர்களுக்கான சம்பளம் என்பன, நீதி அமைச்சினாலேயே வழங்கப்படுகின்றது.
ஆனால் இந்த விவாக சட்டம் குறித்து, நீதிச் சேவைகள் ஆணைக்குழுவுக்கு ஏதேனும் தெளிவு உள்ளதா? இந்த சட்டங்கள் அமுல்படுத்தப்படுவதின் ஊடாக அடிப்படை உரிமை உள்ளிட்ட அனைத்து மனித உரிமைகளும் மீறப்படுகின்றன. இதன் ஊடாக நியாமற்ற தன்மை அமுல்படுத்தப்படுகின்றமை புலப்படுகின்றது என்றார்.