இலங்கை வாட்ஸப் பயனர்களுக்கான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கை வாட்ஸப் பயனர்களுக்கான அதிர்ச்சித் தகவல்!

இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையின் தமிழாக்கம்.

புதிய விதிமுறைகளை நிராகரித்த ஆயிரக்கணக்கான இலங்கை வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்குகளை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். 

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகளையும் தனியுரிமைக் கொள்கையின் தொகுப்பையும் மே 15 ஆம் திகதிக்குள் ஏற்றுக்கொள்ளாத அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் இனி வாட்சப் செய்திகளை அனுப்பவோ பெற்றுக் கொள்ள முடியாது என ​​வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய விதிமுறைகளையும் கொள்கைகளையும் ஏற்றுக்கொள்ளாத பயனர்களுக்கு வரையறுக்கப்பட்ட நேர அழைப்புகள் மற்றும் அறிவிப்புகளை மட்டுமே வழங்கும் என்றும் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது.


$ads={1}

புதுப்பிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கையை ஏற்காத வாட்ஸ்அப் பயனர்களின் கணக்குகள் "செயலற்றவை" என்று பட்டியலிடப்படும், மேலும் 120 நாட்களுக்குப் பிறகு செயலற்றதாக பட்டியலிடப்பட்ட கணக்குகள் நீக்கப்படும்.

இலங்கை தகவல் தொழில்நுட்ப சங்கம் தெரிவித்ததாவது, நாட்டில் 7 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிடுகிறோம், மே 15 க்குப் பிறகு வாட்ஸ்அப் எடுத்த இந்த முடிவு புதிய விதிமுறைகளுக்கு உடன்படாத ஆயிரக்கணக்கான இலங்கை வாட்ஸ்அப் பயனர்களை இழக்கும் அபாயத்தை வாட்ஸ்அப் ஏற்படுத்துவதாக சங்கம் தெரிவித்துள்ளது.


ராஜீவ் யசிரு குருவிட்டகே மெத்திவ்
தலைவர்
இலங்கையின் தகவல் தொழில்நுட்ப சங்கம்
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.