இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி டெப்ளிட்ஸ் மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த சந்திப்பில் பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரியவும் கலந்து கொண்டிருந்தார்.
மேலும், இந்த சந்திப்பின்போது இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் பொருளாதார செயற்பாடுகள் உள்ளிட்ட இருதரப்பு நலன்கள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத்தொடர் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை முக்கியத்துவமிக்கதாகக் கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.