இலங்கையின் ஆளும் கட்சி அமைச்சரவை அமைச்சர் ஒருவரின் மனைவி பிரபல தொழிலதிபர் ஒருவருடன் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டின் முன்னணி சிங்கள் இணையதளமொன்றில் இந்த செய்தி வௌியாகியுள்ளது.
கடந்த காலத்தில் நாட்டின் சில முக்கிய விவகாரங்களில் பேசப்பட்ட அமைச்சரொருவரின் மனைவியே இவ்வாறு வர்த்தகரொருவருடன் வௌிநாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் முக்கிய அரசியல் கட்சியொன்றின் உயர் மட்ட தலைவரொருவரின் மத்தியஸ்தத்தில் குறித்த அமைச்சரின் மனைவியுடன் குறித்த வர்த்தகர் தொடர்பினை பேணியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கமைய, குறித்த தொழிலதிபர் நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் உரிமையாளர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.