வவுனியா பூவரசங்குளத்தில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வவுனியா பூவரசங்குளத்தில் காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு!


வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.


குறித்த பெண் இன்று வீட்டிலிருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.


சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 


சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


-கதீஸ்


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.