
வவுனியா பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எருக்கலம்கல் பகுதியில் தலையில் காயங்களுடன் பெண்ணின் சடலம் ஒன்று இன்று (04) மாலை மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் இன்று வீட்டிலிருந்த நிலையில் காணியின் ஒரு பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார். இதனை அவதானித்த குறித்த பெண்ணின் கணவர் சம்பவம் தொடர்பில் அயலவர்களுக்கும் பொலிஸாருக்கும் தெரியப்படுத்தியுள்ளார்.
சம்பவ இடத்துக்குச் சென்ற பூவரசங்குளம் பொலிஸார் சடலத்தை மீட்டதுடன் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் எருக்கலம்கல் பகுதியை சேர்ந்த 36 வயதான பெண்ணே மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
-கதீஸ்