கொழும்பில் ஒரு பகுதி திடீர் முடக்கம்!!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பில் ஒரு பகுதி திடீர் முடக்கம்!!!!

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளத்தை வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பில் முன்னெடுக்கப்படும் முழு கடையடைப்பு (பூரண ஹர்த்தால்) போராட்டத்திற்கு கொழும்பு வாழ் தமிழர்களும் ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர்.

இதன்படி, கொழும்பு − செட்டியார் தெருவிலுள்ள தங்காபரண வர்த்தக நிலையங்கள் இன்று நண்பகல் 12 மணி முதல் ஒரு மணி வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒரு மணி நேரத்தில் ஐஞ்சுலாம்பு சந்தியில் அமைதியான முறையில், சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, செட்டியார் தெரு வர்த்தகர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

மலையக மக்களின் நாளாந்த அடிப்படை சம்பள உயர்வை வலியுறுத்தி, ஐஞ்சுலாம்பு சந்தியில் நடத்தப்படும் போராட்டத்தில், அனைவரையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.