பிரதமரின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்த மேலதிகாரி யார்?

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமரின் வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்த மேலதிகாரி யார்?


நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்வதற்கான உத்தரவினை மேலிடத்திலிருந்து தனக்கு கிடைத்ததாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டுப்பாட்டு பணிப்பாளர் நாயகம் தயமந்தி எஸ். கருணாரத்ன தெரிவித்துள்ளார்.


எவரால் இந்த உத்தரவு தனக்கு கிடைத்தது என்கிற மேலதிக தகவல்களை வெளியிடவும் அவர் மறுப்பு தெரிவித்திருக்கின்றார்.


தனியார் தொலைக்காட்சியுடன் நடத்தப்பட்ட நேர்காணலில் கலந்துகொண்டபோது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


குளியலறை டைல் உற்பத்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாட்டை தளர்த்துவதற்காக நிதியமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய உத்தரவுக்கு அமைய நேற்று வர்த்தமானி அறிவிப்பு வெளியாகியது.


ஆனால் நேற்று மாலை மீண்டுமொரு வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியதுடன், அதில், குறித்த தடைநீக்கும் வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.