கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் குழப்படி - கூட்டம் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது - அமைச்சர் சுதர்ஷினி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் குழப்படி - கூட்டம் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது - அமைச்சர் சுதர்ஷினி

Sudarshini Fernandopulle

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பாக சுகாதார அதிகாரிகள் எடுத்த சில தன்னிச்சையான முடிவுகள் குறித்து சுகாதார அமைச்சக அதிகாரிகள் மீது ஆரம்ப சுகாதார பராமரிப்பு, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே குற்றம் சுமத்தியுள்ளார்.


முன் அறிவிப்பின்றி முடிவுகள் எடுக்கப்படும்போது தடுப்பூசி செலுத்துவது கடினமானதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


சில முடிவுகள் நள்ளிரவில் மாற்றப்பட்டன. சில முக்கியமான முடிவுகள் முறையாக தெரிவிக்கப்படவில்லை.


தடுப்பூசி கொடுக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட முறை இருக்கவேண்டும், சுகாதார அமைச்சு அதைச் செய்து வந்தது. இருப்பினும், அத்தகைய நடைமுறையை இப்போது காணவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.


கோவிட் நோய் கட்டுப்பாட்டின் பொறுப்பு தனக்கு வழங்கப்பட்டிருந்தாலும், சில கூட்டங்களுக்கு தாம் அழைக்கப்படவில்லை. அத்துடன் சில முக்கிய முடிவுகள் கூட அவருக்கு தெரிவிக்கப்படவில்லை என்று சுதர்ஷினி தெரிவித்துள்ளார்.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.