கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்கப் போவதாக நேற்று (10) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த போதிலும் தொழிநுட்ப குழுவின் முடிவே இறுதியானது எனவும் அவர்களோடு கலந்துரையாடிய பின்னரே இதற்கான முடிவு அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னான்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் சுற்று நிருபம் வெளியாகும் தினம் குறித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் அமைச்சர் சுதர்ஷனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நேற்றைய அறிவிப்பின் பின்னணியில் சுற்று நிருபம் வெளியாகும் தினம் குறித்து கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இனால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சற்று முன்னர் அமைச்சர் சுதர்ஷனி இவ்வாறு தெரிவித்துள்ளார்.