இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மிக்கி ஆர்தர் மற்றும் இலங்கை வீரர் லஹிரு திரிமன்ன ஆகியோர் கொரோனா தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் பங்கேற்க தயாராகி வரும் நிலையில், தற்காலிக அணியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து இவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பயிற்றுவிப்பாளர்கள், நிகர பந்துவீச்சாளர்கள் மற்றும் HPC ஊழியர்கள் ஆகியோருடன் மொத்தம் 36 உறுப்பினர்களுக்கான நேற்று மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளைத் தொடர்ந்து அவை கண்டறியப்பட்டன.