முதல் பொலிஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரணம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

முதல் பொலிஸ் அதிகாரி கொரோனா தொற்றால் மரணம்!

மொனராகலை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரியொருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் திணைக்களத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்த முதல் அதிகாரி இவர்தான் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

உயிரிழந்த பொலிஸ் அதிகாரி 59 வயதுடையவர் என அவர் தெரிவித்தார்.

குறித்த பொலிஸ் அதிகாரி மாரடைப்பு காரணமாக மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூன்று குழந்தைகளின் தந்தையாகிய பொலிஸ் அதிகாரி ஓய்வு பெற தயாராக இருந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.