85% மேற்கு முனையம் இந்தியாவுக்கு - அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

85% மேற்கு முனையம் இந்தியாவுக்கு - அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டது!


சற்று முன்னர் கொழும்பு துறைமுகத்திற்கான புதிய மூலோபாயத் திட்டம் குறித்து அமைச்சரவை அறிக்கை ஒன்றை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன அமைச்சரவையில் சமர்ப்பித்தார்.

அமைச்சரவை அறிக்கை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கிழக்கு முனையத்தை முழுமையாக துறைமுக அதிகாரசபையின் கீழ் வைக்கவும், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் அதை அதிகாரசபையின் கீழ் அபிவிருத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

CICT முனையமானது முன்பு சர்வதேச நிறுவனமொன்றிற்கு வழங்கப்பட்டிருந்த அதே விதிமுறைகளின் அடிப்படையில் இந்தியாவுடன் மேற்கு முனையத்தை உருவாக்கவும் முன்மொழியப்பட்டது.

அதன்படி, மேற்கு முனையத்தை இந்திய அதானி நிறுவனத்திற்கு 85% ஆகவும், இலங்கை அரசுக்கு 15% ஆகவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.