இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக அதிகரித்துள்ளது.
இறுதியாக 05 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1. துனகஹா பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒருவர்.
2. நுகேகொடை பிரதேசத்தில் 82 வயதான பெண் ஒருவர்.
3. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர்.
4. மினுவன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர்.
5. கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர்.