கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 06 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, திவுலன்கடவல பகுதியை சேர்ந்த 78 வயது ஆணொருவர், பல்லெதவின்ன பகுதியை சேர்ந்த 48 வயது பெண்ணொருவர், ஹங்வெல்ல பகுதியை சேர்ந்த 57 வயது ஆணொருவர், நுகேகொடை பகுதியை சேர்ந்த 80 வயது ஆணொருவர், வத்தளை பகுதியை சேர்ந்த 68 வயது ஆணொருவர் மற்றும் ஹுன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த 70 வயது ஆணொருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 403 ஆக உயர்வடைந்துள்ளது.