19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது! மூவர் மறுப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது! மூவர் மறுப்பு!


இன்று (16) காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.


மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி பெற மறுத்துவிட்டனர்.


அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நானயக்கார, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் தடுப்பூசி பெறுவதைத் தவிர்த்தனர்.


இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிர கொரோனா ஆபத்து குழுக்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் மற்றும் தடுப்பூசி பெற அறிவிக்கப்பட்டுள்ளது.


தனது முடிவைப் பற்றி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கையில், 


பொதுமக்களிடமிருந்து தொற்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்ற தனிப்பட்ட முடிவை எடுத்ததாக கூறினார்.


அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் அதிகம் தொடர்பு கொண்டாலும், தடுப்பூசி பெரும் வாய்ப்பை பொதுமக்களிடமிருந்து ஒருவருக்கு வழங்குவது நியாயமானது என்று அவர் மேலும் கூறினார்.


அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ தனது முடிவை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார், பொதுமக்களிடமிருந்து 1 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை தடுப்பூசி பெற மாட்டேன் என்று கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.