இன்று (16) காலை 19 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் தெரிவித்துள்ளார்.
மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் தடுப்பூசி பெற மறுத்துவிட்டனர்.
அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நானயக்கார, அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் தடுப்பூசி பெறுவதைத் தவிர்த்தனர்.
இராணுவ வைத்தியசாலையில் வைத்து இவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீவிர கொரோனா ஆபத்து குழுக்கள் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளனர் மற்றும் தடுப்பூசி பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
தனது முடிவைப் பற்றி அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவிக்கையில்,
பொதுமக்களிடமிருந்து தொற்று அடையாளம் காணப்பட்ட ஒரு நபருக்கு தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்பை வழங்குவதற்காக தான் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்ற தனிப்பட்ட முடிவை எடுத்ததாக கூறினார்.
அரசியல்வாதிகள் பொதுமக்களுடன் அதிகம் தொடர்பு கொண்டாலும், தடுப்பூசி பெரும் வாய்ப்பை பொதுமக்களிடமிருந்து ஒருவருக்கு வழங்குவது நியாயமானது என்று அவர் மேலும் கூறினார்.
அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரின் பெர்னாண்டோ தனது முடிவை ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார், பொதுமக்களிடமிருந்து 1 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடும் வரை தடுப்பூசி பெற மாட்டேன் என்று கூறினார்.