இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதாக கூறும் 15 இளம் பெண்கள் - அதிர்ச்சியில் புலனாய்வு அதிகாரிகள்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொள்வதாக கூறும் 15 இளம் பெண்கள் - அதிர்ச்சியில் புலனாய்வு அதிகாரிகள்

File Photo
பயங்கரவாதி சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டமைக்காக கைது செய்யப்பட்ட 24 வயது இளம் யுவதி அதிர்ச்சிகர தகவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த வகுப்பில் தற்கொலைத் தாக்குதல் செய்வதாக சபதம் செய்த 15 பெண்கள் தான் கலந்து கொண்ட சஹ்ரானின் வகுப்பில் இருந்ததை குறித்த யுவதி வெளிப்படுத்தியுள்ளார்.

தீவிரவாதி சஹ்ரான் ஹாசிமின் தீவிரவாத பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டமைக்காக மாவனெல்லை - ஹிங்குல பகுதியில் வசிக்கும் 24 வயதுடைய இளம் யுவதி சிஐடி மற்றும் பயங்கரவாத விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட யுவதி பயங்கரவாத புலனாய்வு பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்படுகின்றார்.

இதேவேளை மாவனெல்லை பிரதேசத்தில் புத்தர் சிலைகளுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் குறித்த யுவதியின் மூன்று சகோதரர்களும், தந்தையும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.