11 லட்சம் ரூபா மற்றும் போதைப்பொருள்களுடன் இருவர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

11 லட்சம் ரூபா மற்றும் போதைப்பொருள்களுடன் இருவர் கைது!


வெலிக்கடை - இராஜகிரிய பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 11 இலட்சம் ரூபா பணத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராஜகிரிய பகுதியில் இன்று (02) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது சந்தேக நபர்கள் சென்று கொண்டிருந்த வண்டியை சோதனைக்கு உட்படுத்தியுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அதிலிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப் பொருள் மற்றும் 11 இலட்சம் ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.


சந்தேக நபர்கள் போதைப்பொருள் கடத்தல் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இவர்களுடன் இணைந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் தற்போது சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.


பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபர்களை மேலதிக விசாரணைகளுக்காக வெலிக்கடை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், பொலிஸார் இன்றைய தினம் சந்தேக நபர்களிருவரையும் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி 07 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு உத்தரவு பெற்றுக் கொள்ளவும் எதிர்ப்பார்த்துள்ளனர்.


-செ.தேன்மொழி

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.