100 செல்வாக்குமிக்க நபர்கள்; டைம் பத்திரிகையால் கௌரவிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

100 செல்வாக்குமிக்க நபர்கள்; டைம் பத்திரிகையால் கௌரவிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப் பெண்!

2021ஆம் ஆண்டிற்கான டைம் பத்திரிகையின் உலகின் அடுத்த 100 செல்வாக்குமிக்க நபர்களின் பட்டியலில், கனடாவில் வாழும் இலங்கை தமிழ் பெண் ஒருவர் இடம்பெற்றுள்ளார்.


ஒன்ராறியோவை சேர்ந்த மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்பவரே இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளார். இவர் Never Have I Ever என்ற தொலைக்காட்சித் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அந்த தொடரில் நடிக்கும் மைத்ரேயி, ஒரு முதலாம் தலைமுறை இந்தோ அமெரிக்க பெண்ணாக நடிக்கிறார்.


15,000 பேர் பங்கேற்ற ஒரு நேர்காணலில், 19 வயதான மைத்ரேயி அந்த கதாபாத்திரத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார்.


அந்த கதாபாத்திரத்தை உருவாக்கியவரும் தொடரின் இணை தயாரிப்பாளருமான Mindy Kaling கூறும்போது,


மைத்ரேயியுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, ஒரு ஜாலியான குட்டிப் பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது போலத்தான் இருக்கும்.


எனினும், அவரை திரையில் பார்க்கும்போது தன் திரையுலகப் பயணத்தைத் தொடங்கும் ஒரு பெரிய கலைஞரை பார்க்கும் ஒரு உணர்வு ஏற்படுவதை தவிர்க்க முடியாது என்கிறார்.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.