WATCH: நாட்டில் மனைவிமார்களை கணவர்கள் கொலை செய்யும் வீதம் அதிகரித்துள்ளது! -அஜித் ரோஹண

advertise here on top
Join YazhNews WhatsApp Community

WATCH: நாட்டில் மனைவிமார்களை கணவர்கள் கொலை செய்யும் வீதம் அதிகரித்துள்ளது! -அஜித் ரோஹண

வீட்டு வன்முறைகள் கொலைகளாக அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்கவும் குடும்ப மோதல்களைக் கையாளவும் ஆலோசனை வழங்கவும் சிறப்புத் திட்டம் ஒன்றை ஆரம்பிக்க பொலிஸார் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த 24 மணி நேரத்தில் அம்பாறையில் 24 வயது பெண் தனது 33 வயது கணவனால் குத்திக் கொல்லப்பட்டுள்ள அதேவேளை கினிகத்தேன பகுதியில் 27 வயது பெண் 34 வயது கணவனால் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த விடயங்கள் குறித்து விசாரிக்க பொலிஸின் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகத்துக்கு அறிவுறுத்தப்படும் என்றும் நாட்டிலுள்ள குடும்பப் பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்க துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் கணவன் மற்றும் தந்தையர் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நீங்கள் வீட்டில் ஏதாவது துஷ்பிரயோகம் அல்லது வன்முறையை எதிர்கொள்ள நேரிட்டால் 0112 444 444 எனும் இலக்கத்தில் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.