அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் ஒழுங்கிணைப்பாளரான ரத்கரவ்வே ஜினரத்தன தேரரை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்துள்ளனர்.
2019ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தர பரீட்சைக்கு அமர்ந்த மாணவர்கள் எதிர்கொள்ளும் முரண்பாடுகளுக்கு எதிராக இன்று கொழும்பில் நடந்த ஆர்ப்பாட்டக் களத்தில் வைத்து குறித்த தேரர் கைது செய்யப்பட்டார்.
$ads={2}
இந்த போராட்டம் கொழும்பு 07 இல் உள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்திற்கு வெளியே நடத்தப்பட்டது.
மேலும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்ட வீடியோ காட்சிகளில், பொலிஸார் மற்றும் அதிகாரிகள் குறித்த தேரரை கைது செய்ய கையாளும் முறையை காட்டுகின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரத்கரவ்வே ஜினரத்தன தேரர் சட்ட விரோதமாக ஒலிபெருக்கியை பயன்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.