ஸ்புட்னிக் V தடுப்பூசியை தயாரிக்க இலங்கைக்கு அனுமதியளித்துள்ள ரஷ்யா!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஸ்புட்னிக் V தடுப்பூசியை தயாரிக்க இலங்கைக்கு அனுமதியளித்துள்ள ரஷ்யா!


ரஷ்யா தனது சொந்த தயாரிப்பான ஸ்புட்னிக் V தடுப்பூசியை இலங்கை தயாரிப்பதற்கு அனுமதியளித்துள்ளது.


ஸ்புட்னிக் V தடுப்பூசி ஏற்கனவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வருகிறது, கடந்த ஆண்டு இந்தியா மற்றும் ரஷ்யா 300 மில்லியன் ரஷ்ய தடுப்பூசியை இந்திய ஆய்வகங்களில் தயாரிக்க ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.


சீன மற்றும் ரஷ்ய மருந்துகளை அதிக செயல்திறன் அளவைக் காட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அங்கீகாரம் அளித்துள்ளார்.


ஆனால் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தடுப்பூசிகளையும் அவசரகால அல்லது வழக்கமான பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ள இன்னும் அனுமதிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.


இதேவேளை சீன அரசு தனது தயாரிப்பு சினோபோர்மின் தடுப்பூசிகள் 300,000 ஐ இலங்கைக்கு இலவசமாக வழங்க தயாராக உள்ளது என்று சீனாவிற்கான இலங்கை தூதுவர்ர் பாலித கோஹன தெரிவித்துள்ளார்.


இலங்கை ஒப்புதல் வழங்கியதும் சீனத்தயாரிப்பு தடுப்பூசி இலங்கைக்கு அனுப்பப்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.