ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தை ஆதரித்தமை மற்றும் சதி செய்தமை தொடர்பில் மூன்று இலங்கையர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர்கள், இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குல் சம்பவத்துடன் தெடார்புடையவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
$ads={2}
முஹம்மட் நௌபர், முஹம்மட் அன்வர், அஹமட் மில்ஹான் ஆகியோருக்கு எதிராகவே இவ்வாறு குற்றஞ்சாட்டுள்ளது. இவர்கள் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இடம்பெற்ற இந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்கப் பிரஜைகள் ஐவர் உட்பட 268 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.