நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நுவரெலியாவில் முதலாவது கொரோனா மரணம் பதிவானது!

நுவரெலியாவில் மாவட்டத்தில் முதலாவது கொரோனா மரணம் இன்று (09) பதிவாகியது.

கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் கடந்த 01 ஆம் திகதி நுவரெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சுய தனிமைப்படுத்தலில் இருந்த இவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதன் காரணமாகவே இவரை நுவரெலியா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இவர் நிமோனியா காய்ச்சலில் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.


$ads={2}

நுவரெலியாவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது இவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 3 ஆம் திகதி மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டபோது இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் பின்பு இவர் நுவரெலியா மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (09) அதிகாலை 3.00 மணியளவில் உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் இறுதிக்கிரியைகள் கொரோனா சட்ட விதிகளுக்கு உட்பட்டதாக நுவரெலியா பொது மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.(க.கிஷாந்தன்)
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.