இலங்கையில் அமுலுக்கு வரும் கைகளை சுத்தப்படுத்தும் Hand Sanitizerக்கான கட்டுப்பாடு! அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் அமுலுக்கு வரும் கைகளை சுத்தப்படுத்தும் Hand Sanitizerக்கான கட்டுப்பாடு! அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!


தேசிய ஔடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரமே கைகளை சுத்தப்படுத்தும் Hand Sanitizer களை தயாரிக்கவோ அல்லது பயன்பாட்டுக்கு விநியோகிக்கவோ முடியுமென அறிவிக்கபட்டுள்ளது.


நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஷாந்த திஸாநாயக்கவினால் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


$ads={2}


அத்துடன், இந்த நடைமுறையானது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.


இறக்குமதி செய்யப்படும், உற்பத்தி செய்யப்படும் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடும் நிறுவனங்கள், தமது Sanitizer உற்பத்திகளை பதிவு செய்ய வேண்டுமென அறிவிக்க்பட்டுள்ளது.


இதன்படி, பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களினால் மாத்திரமே பயன்பாட்டுக்கான Sanitizer களை நாட்டுக்குள் பாவனைக்காக விடமுடியும் எனவும் சுடம்டிக்காட்டப்பட்டுள்ளது.


$ads={2}


அத்துடன், Sanitizer உற்பத்தினளின் வெளிபுறத்தில், பதிவு இலக்கங்கள் மற்றும் அதற்கான குறியீடுகள் பொறிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.