புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள CIMA தொழில்சார் தகைமை இணையவழி கல்வி முறைமை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள CIMA தொழில்சார் தகைமை இணையவழி கல்வி முறைமை!


CIMA தொழில்சார் தகைமையினை பூர்த்தி செய்வதற்கான மாற்று வழியாக இணையவழி கல்வி முறைமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுப் பரவலின் தாக்கம் காரணமாக முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இலங்கையில் இந்த நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளது.


தொழில்சார் கணக்காளர்களின் சங்கம் இந்த கல்வி முறைமையினை கடந்த வருடம் இறுதியில் ஆபிரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் ஆரம்பித்தது.


இந்நிலையிலே, இலங்கை மாணவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் முகாமைத்துவ கணக்காளர்களின் பட்டய நிறுவனம் இணையவழி கல்வி முறைமையினை அண்மையில் ஆரம்பித்து வைத்தது.


$ads={2}

இந்த நிகழ்வில் தொழில்சார் கணக்காளர்கள் சங்கத்தின் உலகளாவிய சந்தைகள் பிரிவின் முகாமைத்துவப் பணிப்பாளர் Irene Teng, CIMA தேச முகாமையாளர் Zahara Ansary, LSEG இன் பணிப்பாளரும் தலைமை நிதி உத்தியோகத்தருமான Fadhil Jiffry ஆகியோர் கலந்துகொண்டனர்.


இந்நிலையில், தொழில்சார் கல்வித்துறையில் புரட்சி ஏற்படுத்துவதில் CIMA மீண்டும் ஒரு தடவை புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக CIMA மாணவர் சங்கத் தலைவர் ஷெஹான் சேனாநாயக்க இதன்போது தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.