சகோதரியின் கணவரை கோடரியால் கொத்திய நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சகோதரியின் கணவரை கோடரியால் கொத்திய நபர் கைது!

police arrested sri lanka

திருகோணமலை - மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனது சகோதரியின் கணவரை கோடரியால் வெட்டிய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொரவெவ பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த சம்பவம் இன்று (24) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சம்பவம் தொடர்பில் மொரவெவ டி-06 பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் என்றழைக்கப்படும் பரமானந்தன் பிரசாந்த் (36 வயது) என்பவரையே கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


மொரவெவ பம்மதவாச்சி பகுதியைச் சேர்ந்த கே.சரத்குமார் (40 வயது) என்பவர் கைது செய்தவரின் சகோதரியை திருமணம் செய்த நிலையில் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.


இந்நிலையில் இன்று இவர் வீட்டுக்கு சென்று மைத்துனனுடன் முரண்பாட்டில் ஈடுபட்டநிலையில் கோடரியால் வெட்டியதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


$ads={2}


இவர் கோடரி வெட்டுக்கு இலக்கான நிலையில் வலது கையில் வெட்டுக் காயங்களுடன் பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ள நிலையில் அவரை வெட்டிய மைத்துனனும் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.


வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நபர் மகதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மொரவெவ பொலிசார் தெரிவிக்கின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.