தனது ஐந்து குழந்தைகளும் 'ஷாட் கன்' மூலம் சுட்டுக்கொன்ற பெண்! வீட்டுக்கு தீ இட்டு தானும் தற்கொலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனது ஐந்து குழந்தைகளும் 'ஷாட் கன்' மூலம் சுட்டுக்கொன்ற பெண்! வீட்டுக்கு தீ இட்டு தானும் தற்கொலை!


அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது சிறு பிள்ளைகள் ஐவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதுடன், வீட்டையும் தீக்கிரையாக்கிய பின்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


25 வயதான ஓரியானா மையர்ஸ் எனும் இப்பெண் தனது 04 பிள்ளைகளை ‘ஷொட் கன்‘ ரக துப்பாக்கி  மூலம் சுட்டுக் கொன்றுள்ளார். வேர்ஜீனியா மாநிலத்தின்  வில்லயம்ஸ்பேர்க் நகரில் கடந்த மாதம் 08ஆம் திகதி இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


இப்பிள்ளைகளின் மூவர் அவரின் சொந்தப் பிள்ளைகளாவர். ஏனைய இருவரும், அவரின் கணவரின் முந்தைய திருமணத்தின் மூலம் பிறந்த பிள்ளைகளாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  


ஷோன் டோசன் பம்கார்னர் (07), றைலி ஜேம்ஸ் பம்கார்னர் (06), கியன் மையர்ஸ் (04), அரிகிலே நோவா மையர்ஸ் (03), ஹைகன், ஜிராசசி மையர்ஸ் (01) ஆகிய 04 பிள்ளைகளே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் இடம்பெற்றபோது ஓரியனானாவின் அவரது கணவர் பிறையன் பம்கார்னர் வீட்டில் இருக்கவில்லை. அவர்களின் குடும்பத்துக்குச் சொந்தமான வாகனம் விபத்தொன்றில் சிக்கியதால், போக்குவரத்து பிரச்சினையை சமாளிப்பதற்காக தனது உறவினரின் வீட்டில் பிறையன் பம்கார்னர் வீட்டில் சுமார் ஒருவாரம் தங்கியிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.


ஓரியானா மையர்ஸ் எழுதிய பல குறிப்புகள் சம்பவ இடத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. தான் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் ஓரியானா எழுதியிருந்தார்.



மூலம் - மெட்ரோ


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.