தாக்குதல்கள் மற்றும் கடத்தல் தொடர்பில் ஜப்பானில் பல இலங்கையர்கள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாக்குதல்கள் மற்றும் கடத்தல் தொடர்பில் ஜப்பானில் பல இலங்கையர்கள் கைது!

ஜப்பான், சிபா மாகாணத்தில் இரு இலங்கை வாழ் குழுக்களிடையே ஏற்பட்ட கடத்தல் உட்பட பல பிரச்சினைகளை இரு நகராட்சிகளின் பொலிஸ் பிரிவுகள் தீர்க்க முடிவு செய்தது

மொழி மற்றும் பாதிக்கப்பட்டவர்களால் குற்றங்களைப் புகாரளிக்க சிரமம் காரணமாக குறித்த வழக்குகளை விசாரிப்பதில் சிரமங்களை எதிர்கொண்டது, ஆகவே நரிடா மற்றும் சன்மு பொலிஸ் நிலையங்கள் கூட்டாக செயல்பட்டன.


24 வயதுடைய செனவிரத்னகே புத்திக யொஹான் செனவிரத்ன மற்றும் இன்னொரு இலங்கையரை நரிட்டா பொலிஸ் நிலையம் கடத்தல் மற்றும் காயப்படுத்தயமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கடந்த 14 ஆம் திகதி கைது செய்துள்ளது

இரு இலங்கையர்களை கடந்த ஏப்ரல் இவ்விரு குற்றவாளிகளும் கடத்தி காயப்படுத்தியதாக சந்தேகத்தின் பேரிலே கைதாகியுள்ளனர்


$ads={2}

கடத்தல்கள் மற்றும் மறைத்து வைத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகளை இரு சந்தேக நபர்களும் ஒப்புக் கொண்டுள்ளதாக விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.

சன்மு பிரதேசத்தில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இதில் சம்பந்தபட்டுள்ளதாகவும், அவரது வீட்டில் வைத்தே யொஹானின் கும்பல் இவர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மேலும் குறித்த வீட்டு வளாகமும் சேதமாக்கப்பட்டன.

யொஹான் ஐ எதிர்த்த மேலும் 07 இலங்கை இளைஞர்கள் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

கடந்த மே மாதம் சன்மு பிரதேசத்தில் குறித்த இரு இலங்கையர்களும் பயன்படுத்திய வாகன விற்பனை தொடர்பில் ஏற்பட்ட முரண்பாட்டில் கடுமையாக தாக்கப்பட்டனர்.

நரிட்டா நகரை சுற்றியுள்ள பல நகராட்சிகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் விற்பனையில் பல இலங்கையர்கள் ஈடுபட்டு வருகின்றனர்

நரிட்டாவில் இலங்கையர்களின் மக்கள் தொகை 2015 கால கட்டத்தில் 111 ஆகவும் 2020 இல் 563 ஆக உயர்வடைந்துள்ளது.

கடந்த மே மாதத்தில் நரிட்டா காவல் நிலையத்தில் சுமார் 40 புலனாய்வாளர்கள் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டது

இது ஒரு சில இலங்கையர்கள் மட்டுமே பிரச்சினைகளுக்கு காரணமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.