உக்ரேனிய சுற்றுலா பயணிகளால் பேராபத்து!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரேனிய சுற்றுலா பயணிகளால் பேராபத்து!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலா துறையை கட்டியெழுப்பும் நடவடிக்கை தோல்வியடைந்தால் அனைத்து நடவடிக்கைகளும் தோல்வி அடையும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

உக்ரைனில் இருந்து வந்த முதலாவது சுற்றுலா பயணிகள் குழுவில் 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாமையை தொடர்ந்து அந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் ஆபத்தான நிலைமை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}

இந்த சுற்றுலா பயணிகள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து வெளியே சென்றால் சமூகத்திற்கு பாரிய சிக்கல் நிலைமை ஏற்படுவதை தடுக்க வேண்டும். தலதா மாளிகை, சீகிரியா போன்ற இடங்களில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் செல்வதனால் தீவிர அவதானம் செலுத்த வேண்டும்.

சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கும் அதே சந்தர்ப்பத்தில் 22 மில்லியன் மக்களின் பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

இந்த திட்டத்தின் போது சுகாதார நடவடிக்கைகள் மீறப்படுவதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவு உட்பட அதிகாரிகளின் கண்கானிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.