ரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிப்கான் பதியூதீனுக்கு எதிரான மனு மீதான விசாரணை!


போலி காணி உறுதிகளை தயாரித்து தலைமன்னார் பகுதியில் உள்ள காணி ஒன்றை விற்பனை செய்ய முற்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரர் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொடர்பான இரசாயன பரிசோதகரின் அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாக கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

$ads={2}

குறித்த வழக்கு இன்று (21) விசாரணைக்கு எடுத்துக் கொண்டு சந்தர்ப்பத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கையை மே மாதம் 6 ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தலைமன்னார் பகுதியில் உள்ள 80 ஏக்கர் காணியை போலி உறுதி பத்திரங்களை தயாரித்து விற்பனை செய்தமை தொடர்பில் ரிப்கான் பதியூதீன் உள்ளிட்ட மூவக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.