சுவர்ணமஹால் - தீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுவர்ணமஹால் - தீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனு நிராகரிப்பு!


கைது செய்வதை தடுப்பதற்காக சுவர்ணமஹால் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் மூவர் பிணை எதிர்பார்த்து தாக்கல் செய்த மனுக்களை எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

$ads={2}

இருப்பினும் குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவரான தீபா எதிரிசிங்க தாக்கல் செய்த மனுவில் பதிப்பில் ஏற்பட்டிருந்த தவறு காரணமாக குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹாலினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நாலக எதிரிசிங்க, ஜீவக எதிரிசிங்க மற்றும் அசங்க எதிரிசிங்க ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் எதிர்வரும் 27 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

குறித்த மனுக்களின் பிரதிவாதியான குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொறுப்பதிகாரிக்கு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.