கொழும்பை தவிர ஏனைய பகுதிகளில் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொழும்பை தவிர ஏனைய பகுதிகளில் கொரோனா கொத்தணிகள் உருவாகும் அபாயம்!

கொழும்பு மாவட்டத்திற்கு வெளியிலுள்ள ஏனைய பகுதிகளில் கொவிட் இணை கொத்தணிகள் உருவாகுவதற்கான அபாயம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.

கொழும்பு மாநகர எல்லைக்குள் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ள போதிலும், ஏனைய பகுதிகளிலுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவிக்கின்றார்.


$ads={2}

களுத்துறை, பேருவளை, மொனராகலை மற்றும் காத்தான்குடி ஆகிய பகுதிகளில் கொவிட் இணை கொத்தணிகள் உருவாவதற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

சுகாதார பிரிவின் ஆலோசனைகளை சரியான முறையில் கடைபிடித்து, புதிய கொவிட் கொத்தணி உருவாகுவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண கோரிக்கை விடுக்கின்றார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.