கழிவுகளை வீச வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கழிவுகளை வீச வந்த வாகனத்தை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள்!

File Photo
வீதிகளில் வீசும் நோக்குடன் திண்மக் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை ஊரவர்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ். நகரை அண்டிய காக்கை தீவு பகுதியில் உள்ள திண்மக் கழிவகற்றும் வளாகத்தை சூழவுள்ள பகுதிகளில், இரவு வேளைகளில் வாகனங்களில் கழிவுகளை எடுத்து வந்து வீதியோரமாக பலர் வீசி செல்கின்றனர்.

அதனால் அப்பகுதி மக்கள் சுகாதார சீர்கேடுகளுக்கு மத்தியில் வாழ்வதுடன் , அவ்வீதி வழியாக செல்வோரும் பெரும் இடர்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று (21) ஊரவர்கள் இரவு வேளைகளில் கழிவுகளை வீசி செல்பவர்களை மடக்கிப் பிடிக்க ஒன்று கூடி காத்திருந்தனர்.

இதன்போதே வாகனம் ஒன்றில் கழிவுகளை ஏற்றி வந்த இருவர் அப்பகுதியில் கழிவுகளை வீசியபோது பொதுமக்கள் அவர்களைப் மடக்கி பிடித்தனர்.


$ads={2}

அது தொடர்பில் மானிப்பாய் பிரதேச சபை தவிசாளருக்கு பொதுமக்கள் அறிவித்தமையை தொடர்ந்து , அங்கு சென்ற தவிசாளர் , உறுப்பினர்கள் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவித்து கழிவுகளை கொண்ட வந்தவர்களையும் வாகனத்தையும் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

அதனையுடுத்து வாகனத்தையும் அதில் வந்த இருவரையும் பொலிஸ் நிலையம் கொண்டு சென்ற பொலிஸார் இருவருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.