கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்று - அபாய வலயமாக காத்தான்குடி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கிழக்கில் வேகமாக பரவும் கொரோனா தொற்று - அபாய வலயமாக காத்தான்குடி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனையில் இரு பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்ய்யப்பட்டது..

இன்று (07) காத்தான்குடியில் கண்டறியப்பட்டதையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மயூரன் தெரிவித்தார்.


$ads={2}

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மேற்கொள்ளும் எழுந்தமானமாக பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் ஏறாவூர் சுகாதார பிரிவில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்ள் உட்பட 3 பேருக்கும், காத்தான்குடி சுகாதார பிரிவில் 20 பேருக்கும், வெல்லாவெளி சுகாதார பிரிவில் ஒருவருக்கும் மட்டக்களப்பு சுகாதார பிரிவில் ஒருவர் உட்பட 25 பேருக்கு தொற்றுதி கண்டறியப்பட்டுள்ளது

இதனையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் 334 ஆக அதிகரித்துள்ளதுடன் காத்தான்குடியில் 146 ஆதிகரித்துள்ளது.

எனவே பொதுமக்கள் தொடர்ந்தும் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள சுகாதார முறைகளை பேணி செயற்படுமாறு அவர் தெரிவித்தார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.