சாரதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அபராத பத்திர சலுகை தொடர்பான அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாரதிகளுக்கு வழங்கப்பட்டிருந்த அபராத பத்திர சலுகை தொடர்பான அறிவித்தல்!

கொரோனா அச்சம் காரணமாக காலம் நிறைவடைந்த போக்குவரத்து அபராத பத்திரங்களுக்கான அபராத கட்டணங்களை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் இன்றுடன் (15) நிறைவடைவதாக தபால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


$ads={2}

எவ்வாறாயினும், கொழும்பு மாநகராட்சி போக்குவரத்து காவற்துறை பிரிவினராலும், காவற்துறை அவசரகால பதிலளிப்பு பிரிவினராலும் வழங்கப்பட்ட அபராத பத்திரங்களுக்கான கட்டணங்களை செலுத்த எதிர்வரும் 08 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்படுவதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறையினரின் வேண்டுகோளுக்கமைய இவ்வாறு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.