இணையவழி கல்வியில் ஈடுபட்ட மாணவி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இணையவழி கல்வியில் ஈடுபட்ட மாணவி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

இலங்கை முழுவதும் விபச்சார நடவடிக்கைகளுக்காக இணையத்தினூடாக யுவதிகளை பயன்படுத்தும் நடவடிக்கை ஒன்று புலனாய்வு பிரிவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தயாரிக்கப்பட்ட இணையத்தளம் ஊடாக மோசமான தொழிலில் ஈடுபடும் யுவதிகளிடம் தினமும் ரூ.800 - 1000 வரையில் பணம் அறவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணைக்கமைய இணையத்தள உரிமையாளருக்கு நாள் ஒன்றுக்கு இது தொடர்பான விளம்பரங்கள் பதிவிடுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் கிடைப்பதாக குறிப்பிடப்படுகின்றது.


$ads={2}


இணைய தொழில்நுட்பம் ஊடாக கற்கும் பிள்ளைகளை ஏமாற்றி பல்வேறு இடங்களுக்கு அழைத்து பணம் பெறும் நடவடிக்கையிலும் இந்த மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பம்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவி ஒருவர் மோசமான நடவடிக்கையில் ஈடுபட்ட நிலையில் பணம் வழங்குவதில் ஏற்பட்ட பிரச்சினையில் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார்.

இந்த மோசடி நடவடிக்கை தொடர்பில் 150 யுவதிகள் தினமும் இணையத்தளத்தில் விளம்பரம் பதிவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த நாட்களில் இந்த சம்பவம் தொடர்பில் 18 யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இணையத்தளத்திற்கு தொடர்புடைய உரிமையாளர் தேடப்பட்டு வருவதுடன், இணையத்தளத்தை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.