கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கூரிய ஆயுதத்துடன் கருணா அம்மானை சந்திக்க சென்ற நபர் கைது!


கூரிய ஆயுதத்துடன் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா அம்மான்) சந்திக்கச் சென்ற நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.


நேற்றைய தினம் முரசுமோட்டை பகுதியில் தங்கியிருந்த கருணாவை சந்திக்கச் சென்ற நபரைக் கடமையில் நின்ற பொலிசார் சோதனைக்குட்படுத்திய வேளை அவரிடமிருந்து குறித்த கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


$ads={2}


குறித்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் குறிப்பிடுகின்றனர்.


குறித்த கத்தி மற்றும் அரிவாள் ஆகியவற்றை வயலிற்குப் பசளை இடுவதற்காக எடுத்துச் சென்றதாகவும், திரும்புகையில் கருணா சந்தித்துச் செல்ல சென்றதாகவும் குறித்த சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.


சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.