பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாமையினால் கொரோனா பரவுகை அதிகரித்துள்ளது! -உபுல் ரோஹன

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாமையினால் கொரோனா பரவுகை அதிகரித்துள்ளது! -உபுல் ரோஹன


பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படாத காரணத்தினால் கொரோனா நோய்த்தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.


பண்டிகைக் காலத்தில் மாவட்ட மட்டத்திலேனும் பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு தமது சங்கம் கோரிக்கை விடுத்த போதிலும் அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


$ads={2}


இவ்வாறு பயணக் கட்டுப்பாடு விதிக்காமையினாலேயே இன்று நாள் தோறும் கூடுதலான எண்ணிக்கையில் நோய்த் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.


நத்தார் மற்றும் புத்தாண்டு காலத்தில் மேல் மாகாணத்திலிருந்து அதிகளவானவர்கள் வெளி மாகாணங்களுக்கு செல்லக்கூடும் என்பதனால் அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும், பயணக் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்னதாக மேல் மாகாணத்தில் மட்டும் அதிகளவில் கொரோனா தொற்றாளிகள் பதிவாகி வந்த நிலையில் தற்பொழுது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தொற்றாளிகள் பதிவாகி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


கொழும்பு மட்டுமன்றி திருகோணமலை, அனுராதபுரம், காலி, ஹம்பாந்தோட்டை போன்ற பிரதேசங்களிலும் நோய்த் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது என அவர் நேற்றைய தினம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.