உக்ரைனில் இருந்து மேலும் பலர் இலங்கைக்கு! இதுவரை ஐவருக்கு தொற்று உறுதி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

உக்ரைனில் இருந்து மேலும் பலர் இலங்கைக்கு! இதுவரை ஐவருக்கு தொற்று உறுதி!


உக்ரைனிலிருந்து மேலும் 173 சுற்றுலாப் பயணிகள் இன்று நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.


இன்று (02) பிற்பகல் 2 மணியளவில் இவர்கள் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இதனிடையே, உக்ரைனிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் ஒரு குழுவினர், இன்று சுற்றுலா பயணத்தில் ஈடுபட்டனர்.


$ads={2}


ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவும் சுற்றுலா பயணிகளுடன் இணைந்துகொண்டார்.


உக்ரைனிலிருந்து 180 பேர் அடங்கிய சுற்றுலா பயணிகள் கடந்த 28 ஆம் திகதி நாட்டை வந்தடைந்தனர்.


இவர்களில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், ஏனையோருக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், இந்த சுற்றுலா பயணிகள் சமூகத்துடன் தொடர்பை பேணுவதில்லை என்பதால் அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தவில்லை என சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.