பெப்ரவரி முதல் 10 அத்தியவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பெப்ரவரி முதல் 10 அத்தியவசிய பொருட்களுக்கு நிர்ணய விலை !

வர்த்தக அமைச்சு 10 அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிர்ணய விலையை பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.

நிர்ணய விலையில் நுகர்வோர் பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்குடன் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.


$ads={2}

தொடர்ந்து 6 மாதங்களுக்கு நிர்ணய விலையை பேணுவதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

நிர்ணய விலையில் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கக்கூடியவர்களிடமிருந்து விலைமனுக்களை கோரவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அடுத்த மாதம் முதல் இந்த திட்டத்தை அமுல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அரிசி, கோதுமை, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, டின் மீன் உள்ளிட்ட 10 அத்தியாவசிய பொருட்களை நிர்ணய விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

$ads={1}
நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் நிர்ணய விலையில் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன சுட்டிக்காட்டினார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.