துறைமுகத்தை விற்பதற்கு எதிராக செயல்பட நாம் தயாராக இருக்கின்றோம்! - அமைச்சர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

துறைமுகத்தை விற்பதற்கு எதிராக செயல்பட நாம் தயாராக இருக்கின்றோம்! - அமைச்சர்

கொழும்பு துறைமுக கிழக்கு முனையத்தை விற்பதற்கான அமைச்சரவை பத்திரம் நாளை திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படுமாயின் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியில் தலைவரும் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன சுதந்திர முன்னணியின் 5 பங்காளி கட்சிகளின் தலைவர்களுக்கு தொலைபேசியூடாகவும் அமைச்சர் விமல் வீரவன்ச அழைப்பு விடுத்துள்ளார். இந்த கலந்துரையாடல் அவரது இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.

பிவிதுரு ஹெல உருமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில, லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ விதாரண, ஸ்ரீலங்கா கம்யூனிஸ் கட்சியின் பொது செயலாளர் விஷேட வைத்திய நிபுணர் ஜீ.வீரசிங்க, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ண, ஐக்கிய மக்கள் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் விரான் அலஸ் ஆகியோருக்கே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.