சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்க தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!

நான்கு வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு, இதுவரை கைதிகளுக்கான இலக்கம் கிடைக்கவில்லை என ஸ்ரீலங்கன் மீரர் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

பல்லன்சேன சிறைச்சாலையிலிருந்து, அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு அழைத்து செல்லப்பட்ட ரஞ்ஜன் ராமநாயக்க, 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், தனி சிறைகூடமொன்றில் அவர் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் லோஹான் ரத்வத்தே தெரிவிக்கின்றார்.

எனினும், ஏனைய சிறை கூடங்களில் மூன்று கைதிகள் விகிதம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.


இதேவேளை, குறித்த சிறைச்சாலையில் சிறை கைதிகள் மற்றும் சந்தேகநபர்கள் என 1100 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு வெளியிலிருந்து உணவுகளை பெற்றுக்கொள்ள முடியாது என்பதுடன், மாதத்திற்கு ஒரு முறை மாத்திரமே உறவினர்களுக்கு அவரை சந்திக்க முடியும் எனவும் அறிய முடிகின்றது.

எவ்வாறாயினும், கடந்த சில தினங்களாக ஏனைய சிறை கைதிகளை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு கிடைத்துள்ளதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய சிறை கைதிகள் ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு சிறந்த வரவேற்பை வழங்கி வருவதாக தெரிய வருகின்றது.

தனி சிறை கூடத்திலுள்ள ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு தலையணை, பாய் மற்றும் போர்வை ஆகியன கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மெத்தையை பெற்றுக்;கொள்வதற்கான கோரிக்கையை முன்வைக்க ரஞ்ஜன் ராமநாயக்கவிற்கு இயலுமை காணப்படுகின்ற போதிலும், அவர் இதுவரை மெத்தையை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை விடுக்கவில்லை என அறிய முடிகின்றது.

உடற்பயிற்சிகளை செய்வதற்கும், நாளாந்த பத்திரிகைகளை வாசிப்பதற்கும் ரஞ்ஜன் ராமநாயக்க நேரத்தை ஒதுக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.