எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எரிபொருள் அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை!

எரிபொருள் விலையை அதிகரிக்கும் திட்டத்தை அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

எண்ணெய் விலை உயர்வால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு (CPC) இழப்பு ஏற்படுவதாக தான் அமைச்சரவையில் தெரிவித்ததாக அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


$ads={2}

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது கூறப்பட்டுள்ளது.

“நான் எரிபொருள் விலையை அதிகரிக்க அமைச்சரவையில் சமர்ப்பிக்கவில்லை. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 58 டொலரை தாண்டியுள்ளதால், CPC ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.10 மற்றும் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.17 இழக்கிறது என்று நான் சொன்னேன்.

எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்து கொண்டிருக்கும் நேரத்தில் கஜானா (Treasury) பெட்ரோலியம் மீதான வரிகளை குறைக்காவிட்டால் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று நான் சுட்டிக்காட்டினேன். ஒவ்வொரு வகை எரிபொருளுக்கும் தற்போது விதிக்கப்படும் வரியின் அளவையும் சுட்டிக்காட்டினேன்.

இந்த நேரத்தில் எரிபொருள் விலையை அதிகரிக்க முடியாது என்பதால் கஜானாவினால் விதிக்கப்படும் வரிகளை குறைக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறினார். அது உண்மையில் எனது குறிக்கோளாக இருந்தது”

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.