இருளில் மூழ்கிய பாகிஸ்தான் - முக்கிய நகரங்கள் உட்பட!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இருளில் மூழ்கிய பாகிஸ்தான் - முக்கிய நகரங்கள் உட்பட!

பாகிஸ்தானில் இன்று அதிகாலை நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது.

மின்தடையால் தலைநகர் இஸ்லாமாபாத், காராச்சி, லாகூர் உட்பட அனைத்து முக்கிய நகரங்களும் இருளில் மூழ்கின.


மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறே அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.


தற்போது நாட்டின் சில பகுதிகளில் மின்விநியோகம் வழக்கநிலைக்குத் திரும்பிவிட்டதாகவும் இன்னும் சில மணி நேரத்தில் அனைத்தும் சரி செய்யப்பட்டுவிடும் என்றும் பாகிஸ்தானிய மின்சக்தித் துறை அமைச்சர் ஒமார் அயூப் கான் கூறினார்.

$ads={2}

2015ஆம் ஆண்டும் பாகிஸ்தானில் இதே போல் நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது. அதில் விமான நிலையங்கள், வர்த்தகக் கட்டடங்கள் உள்ள வட்டாரங்கள் உட்பட பாகிஸ்தானின் 80 விழுக்காட்டுப் பகுதி இருளில் மூழ்கியது.

அந்தச் சம்பவம் அந்நாட்டு வரலாற்றில் நேர்ந்த ஆகமோசமான மின்தடையாகக் கருதப்படுகிறது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.